தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலை பொறுத்தவரை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என்பது நன்றாகவே தெரியும். முக்கியமான தருணங்களிலும், விசேஷ நாட்களிலும் கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டவர். ஆனால் அவருடைய மகன் பிரணவ் மோகன்லால் ஆன்மீக விஷயத்தில் மோகன்லாலுக்கு அப்படியே நேரெதிரானவராம். கோவிலுக்கு வருமாறு குடும்பத்தினர் அழைத்தால் கூட, ஆளை விடுங்க சாமி என கும்பிடு போட்டு எஸ்கேப் ஆகிவிடுவாராம். மகன் குறித்த இந்த தகவல்களை சமீபத்தில் பகிர்ந்துகொண்ட மோகன்லால் அதற்கான காரணங்களையும் கூறியுள்ளார்.
“நாங்கள் வளர்ந்த காலத்தில் கோவிலுக்கு செல்வதும், பாசுரங்கள் படிப்பதும் எங்களது தினசரி வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்தது. மேலும் அவற்றை கட்டாயம் பின்பற்றும்படி எங்களுக்கு பெரியவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் பிரணவ் படித்து வளர்ந்தது எல்லாம், சுமார் 23 நாடுகளை சேர்ந்த மாணவர்கள் வந்து படிக்கின்ற இன்டர்நேஷனல் பள்ளியில். அங்கே ஆன்மீகத்திற்கான வேலையேது..? நாமாக எதையும் திணிக்கவும் முடியாது. யாராவது ஒருவர் வந்து என் மகனிடம் கடவுளை தினமும் வழிபடு என கூறினால், அப்படி வழிபடுவதால் என்னென்ன பயன்கள் என எதிர் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுவார். அதனால் அவரது நம்பிக்கைகளில் நாங்கள் தலையிடுவது இல்லை” என கூறியுள்ளார் மோகன்லால்.