இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
திருவனந்தபுரம்:பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள, தங்கல் திரைப்படத்தின் வெற்றி, மலையாள திரைத் துறையினரை கலக்கமடைய செய்துள்ளது.
மல்யுத்தத்தை மையமாக வைத்து, பாலிவுட் நடிகர் அமீர் கான் நடிப்பில் வெளியாகியுள்ள படம், தங்கல். இந்த படம், கேரளாவில் மட்டும், 60 தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது. கேரளாவில், முதல் மூன்று நாட்களில், ஒரு கோடி ரூபாய் வசூலாகி, சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிருத்விராஜ் மற்றும் முக்கிய நடிகர்களின் நான்கு படங்கள், கிறிஸ்துமஸ் நாளான நேற்று, திரைக்கு வரத் தயாராக இருந்தன.ஆனால், தங்கல் படத்துக்கு வசூல் நன்றாக இருப்பதால், மலையாள படங்களை திரையிட, தியேட்டர் உரிமையாளர்கள் சில நிபந்தனைகளை விதித்தனர்.
தங்கல் படத்துக்கு தான், இப்போது ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது; அந்த படத்தை துாக்கி விட்டு, மலையாள படங்களை திரையிட வேண்டுமெனில், எங்களுக்கு சில சலுகைகளை அளிக்க வேண்டும் என, தியேட்டர் உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக, தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களிடையே முத்தரப்பு பேச்சு நடந்தது. எனினும் இதில், எந்த உடன்பாடும் எட்டப்படாததால், கிறிஸ்துமஸ் நாளான நேற்று, எந்தவித மலையாளப் படமும் திரையிடப்படவில்லை.