அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
இந்த வருடம் 'பென்சில்', 'கிடாரி' என இரண்டு படங்களில் தனது குணச்சித்திர நடிப்பால் பாராட்டுக்களை பெற்றார் நடிகை சுஜா வருணீ.. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் ஜெயராம் நடிக்கும் 'அச்சாயன்ஸ்' என்கிற படத்தில் முக்கியமான ரோலில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.. சமீபத்தில் நடைபெற்ற பேட்மிண்டன் லீக் போட்டிகளில் சென்னை அணியை உற்சாகப்படுத்தும் விதமாக கலந்துகொண்டவரிடம் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு குறித்து பேசியுள்ளார் மலையாள குணச்சித்திர நடிகர் இடவேள பாலு.. அங்கேயே படத்தின் கதாநாயகன் ஜெயராமும் இருந்ததால் அவரும் உடனே ஒகே சொல்லிவிட்டார்..
ஏற்கனவே சுரேஷ்கோபி நடித்த 'பிளாக் டாலியா' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சுஜா வருணீ.. இது அவருக்கு மலையாளத்தில் இரண்டாவது படம்.. இந்தப்படத்தில் கிராமம் ஒன்றில் நடக்கும் குற்றம் ஒன்றை விசாரணை செய்யும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் சுஜா. சமீபத்தில் வாகாமன் பகுதியில் இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் சுஜா வருணீ. அங்கே அவருக்கு இன்னொரு சர்ப்ரைஸ் ஷாக்காக இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜுடன் சேர்ந்து நடிக்க வேண்டிய காட்சிதான் படமாக்கப்பட இருந்ததாம். மலையாளத்தில் மீண்டும் நடிப்பதுடன், பிரகாஷ்ராஜுடன் இணைந்து நடிப்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தாராம் சுஜா வருணீ.