அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
திரையரங்குகளில் தேசியகீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவு சில நாட்களுக்கு முன் கேரளாவில் 6 பேரை கைது செய்யும் அளவுக்கு கொண்டுபோய்விட்டது.. ஆம்.. தற்போது கேரளாவில் நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட திரைப்பட விழாவில் திரைப்படங்கள் திரையிடப்பட்டபோது சில இளைஞர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் அவமரியாதை செய்துள்ளனர்.. இந்த தகவலறிந்து அங்கே வந்த போலீஸார் அந்த 6 பேரையும் கைது செய்தனர்..
ஆனால் போலீஸாரின் இந்த அதிரடி செயலை இந்த நிகழ்ச்சியை நடத்தும் அமைப்பின் சேர்மன் கமல் கண்டித்துள்ளார். ஆம்.. பிரபல மலையாள இயக்குனர் கமலே தான். தேசியகீதத்திற்கு அவர்கள் மரியாதை செய்யாமல் இருந்தது தவறுதான்.. ஆனால் அதற்காக கைது வரை போகவேண்டிய அவசியம் என்ன..? அதுவும் சேர்மனான தன்னிடம் கூட அனுமதி பெறாமல் அவர்கள் எப்படி விழா அரங்கில் நுழையலாம் என கேள்விகளை எழுப்பியுள்ளார்..
இது இந்து அமைப்பில் உள்ள சில இளைஞர்களை ஆத்திரப்பட வைத்துவிட்டது. உடனே அவர்கள் இயக்குனர் கமல் வீட்டு முன்பாக ஒன்றுதிரண்டு தேசிய கீதத்தை பாடியதோடு, இயக்குனர் கமலை 'பாகிஸ்தானுக்கு போ' என கோஷமிட்டுள்ளார்கள். இதற்கு கமல் உடனடியாக ரியாக்ட் பண்ணியுள்ளார். “தேசிய கீதத்தை நான் ஒருபோதும் அவமதிக்கவில்லையே.. என்னை பாகிஸ்தானுக்கு போக சொல்வதன் மூலம் இவர்கள் என்ன சாதிக்க நினைக்கிறார்கள்... சொல்லப்போனால் தெருவில் நின்று தேசிய கீதம் பாடி அதற்கு அவமரியாதை செய்தது இவர்கள் தான்.. இதுதான் அவர்கள் தேசியகீதத்திற்கு மரியாதை கொடுக்கும் லட்சணம்” என பதிலடி கொடுத்துள்ளார்.