பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
மலையாள சினிமாவின் மோஸ்ட் வான்டட் கதாசிரியாக மாறிவிட்டார் உதயகிருஷ்ணா.. 'புலி முருகன்' என்கிற ஒரே படம் இவரது வேல்யூவை ஓஹோவென உயரத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டது. தமிழில் இரட்டை எழுத்தாளர்களான சுபா (சுரேஷ்-பாலா) பிரபலமான கதாசிரியர்களாக இருப்பது போல மலையாளத்தில் சிபி கே.தாமஸ்-உதயகிருஷ்ணா ஜோடியும் ரொம்பவே பாப்புலரானதுதான். சுமார் 29 படங்களில் இணைந்து கதை எழுதியுள்ள இந்த ஹிட் கூட்டணி, மோகன்லாலின் 'ட்வென்டி 20', 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்', 'கிலுக்கம் கிலுகிலுக்கம்' உள்ளிட்ட பல படங்களை வெற்றிப்படமாக்கியுள்ளது..
இந்த கூட்டணியில் இருந்து தனியாக வெளியே வந்த உதயகிருஷ்ணா முதன்முதலாக கதை எழுதிய படம் தான் மோகன்லால் நடிப்பில் வெளியாகி, 130 கோடிகளை தாண்டி வசூலில் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் 'புலி முருகன்'.. மலையாள சினிமாவின் தரத்தையும், பிசினஸ் வேல்யூவையும் விரிவாக்கியதில் கதாசிரியர் உதயகிருஷ்ணாவுக்கும் மிக முக்கிய பங்கு இருக்கிறது.. இதனால் அவரை கௌரவிக்கும் விதமாக மலையாள இயக்குனர்கள் சங்கம் உதயகிருஷ்ணாவுக்கு பாராட்டு விழா நடத்தியுள்ளது. மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரும், இயக்குனர் சங்க செயலாளருமான இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் தான் இந்த விழாவை முன்னின்று நடத்தியுள்ளார்.