டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
வைசாக் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‛புலி முருகன்'. மலையாளத்தில் வெளியாகி சக்கபோடு போட்டிருக்கும் இப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தொடர்ந்து 100 தியேட்டர்களில் 50வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திரையுலகினருக்கு பெரும் தலைவலியாக இருக்கும் திருட்டு விசிடி பிரச்னை இப்போது இணையதளங்கள் வாயிலாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. படம் வெளியாகும் அன்றே திருட்டுத்தனமாக இணையதளங்களில் சிலர் பதிவேற்றிவிடுகின்றனர். இது திரைத்துறையினரை கவலை அடைய செய்துள்ளது.
இதனிடையே புலி முருகன் படத்தை ‛தமிழ் ராக்கர்ஸ்' என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தொடர்பாக அந்த இணையதளத்தை சேர்ந்த சதீஷ், புவனேஷ் மற்றும் ஸ்ரீனி என்ற மூவரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.