பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு இனம், மொழிகளை கடந்து நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பலர் தங்களது அஞ்சலியையும் இரங்கலையும் செலுத்தினார்கள்.. அப்படிப்பட்டவர்களில் மலையாள சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் அஜூ வர்கீஸும் ஒருவர்.. ஜெயலிதாவின் மறைவை ஒட்டி, தனது முகநூலில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ள அவர், தமிழர்களை அவ்வப்போது கிண்டலடிக்கும் மலையாளிகளை விளாசும் விதமாக சாட்டையடி வார்த்தைகளை கூறியுள்ளார்.
“தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தால் தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கின்றனர்.. காரணம் அவரை நாட்டின் தலைவராக மட்டுமல்லாமல் தங்களது குடும்பத்தின் தலைவராகவும் அவர்கள் நினைக்கிறார்கள். அவர் அவர்களுக்காக எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். மக்கள் கட்டுப்படுத்த இயலாமல கதறி அழுகிறார்கள் என்றால், டிவியில் தங்களது முகம் தெரிவதற்காக அல்ல.. அவர் மீது அவர்கள் வைத்துள்ள அன்பும் மரியாதையும் தான் காரணம்.
நம் ஊரில் மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள் யாராவது இறந்துபோனால் நாம் இதுபோலவா செய்கிறோம்.. வெறும் இரண்டு நிமிட மவுன அஞ்சலியுடன் அடுத்த வேலைகளை பார்க்க அல்லவா கிளம்பி விடுகிறோம். இந்த லட்சணத்தில் நாம் இருக்கும்போது தமிழர்களை கிண்டலடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. முதலில் நாம் சரியாக இருக்கிறோமா என்பதை பார்ப்போம்.. தமிழர்கள் தங்கள் தலைவர்களுக்காக நாள் முழுவதும் அழுது தீர்ப்பதால் அவர்கள் முட்டாள்களும் அல்ல, நாம் இரண்டு நிமிட அஞ்சலியுடன் முடித்துக்கொள்வதால் அறிவாளிகளும் அல்ல.. நாம் நம் தலைவர்களை டிவிக்களில் மட்டுமே பார்க்கிறோம்.. அங்கோ அவர்கள் ஜெயலலிதாவை தங்களது குடும்பத்தினராகவே பார்க்கிறார்கள்” என கூறியுள்ளார் அஜு வர்கீஸ்..