'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
விஜய் நடித்த கத்தி படத்தை அடுத்து அகிரா இந்தி படத்தை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், தற்போது மகேஷ்பாபு நடிக்கும் படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராகுல்ப்ரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வருகின்றனர். துப்பாக்கி படத்தை போன்று ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்திற்கு முதலில் வாஸ்கோடகாமா என்று டைட்டில் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால், பின்னர் அந்த செய்தியை மறுத்தார் முருகதாஸ். அதையடுத்து டைட்டீலை பிறகு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு படப்பிடிப்பில் இறங்கினார். தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அந்த படத்திற்கு ஏஜென்ட் சிவா என்ற தலைப்பை வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி வெளியானதை அடுத்து, அதற்கு மறுப்பு சொல்லாத ஏ.ஆர்.முருகதாஸ், படத்தின் தலைப்பு இன்னும் பரிசீலனையில்தான் உள்ளது என்று கூறியுள்ளார். இருப்பினும், இந்த தலைப்பைதான் அவர் உறுதி செய்து வைத்திருப்பதாக அப்படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.