'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சென்னை, மதுரை, கோவை, நெல்லை, தஞ்சை என தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பல பாஷைகளில் நம்ம ஊர் ஹீரோக்கள் பேசுவதைப்போல மலையாள சினிமாவிலும் கோழிக்கோடு, திருவனந்தபுரம்,காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு, திருச்சூர், கண்ணூர், காசர்கோடு, கொல்லம் ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் பிரபலமானவை தான். சில பாஷைகள் கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கும். சொல்லப்போனால் இன்னொரு பகுதியில் வசிக்கும் மலையாளிகளே அவற்றை புரிந்துகொள்ள சில நேரம் சிரமப்படுவார்கள். மலையாளத்தில் எவர்கிரீன் சூப்பர்ஹிட் என்று சொல்லப்படுகிற 'ராஜாமாணிக்கம்' படத்தில் மம்முட்டி பேசிய திருவனந்தபுரம் பாஷையை ரசிக்காதவர் கேரளாவில் பாக்கி இருக்கமாட்டார்கள்.
இப்போது மம்முட்டி தான் புதிதாக நடித்துவரும் 'புத்தன் பணம்' (புதிய பணம்) என்கிற படத்தில் காசர்கோடு பாஷை பேசுகிறார்.. நித்யானந்தா ஷெனாய் என இந்தப்படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயரே வித்தியாசமாக இருக்கிறது.. இந்தப்படத்தை மம்முட்டியின் ஆஸ்தான இயக்குனர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவரான ரஞ்சித் தான் இயக்குகிறார்.. இவர்தான் மம்முட்டியை 'பிரஞ்சியேட்டன் தி செய்ண்ட்' படத்தில் திருச்சூர் பாஷையையும், 'பாலேரி மாணிக்கம்' படத்தில் கோழிக்கோடு பாஷையையும் பேசவைத்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.