'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
மலையாள சினிமாவில் சந்தோஷ் பண்டிட் என்கிற ஒரு நடிகர் இருக்கிறார். நம்ம ஊர் பவர் ஸ்டாரையும் சாம் ஆண்டர்சனையும் இணைத்து ஒரு நடிகரை உருவாக்கினால் என்ன பவர் இருக்குமோ அதுதான் சந்தோஷ் பண்டிட். சினிமாவுக்கென உள்ள இலக்கணங்களை எல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு தானே கதை எழுதி, பாடல்கள் எழுதி, இசையமைத்து இயக்கி, நடித்து, சுருக்கமாக சொல்லப்போனால் நாம் டி.ராஜேந்தரின் மலையாள வெர்ஷன் என்றுகூட சொல்லலாம். கூடவே எக்ஸ்ட்ராவாக சாம் ஆண்டர்ஷனுக்கே சவால் விடும் நடனத்திறமை வேறு..
இதனாலேயே கேரள கல்லூரி மாணவ, மனைவியர் மத்தியில் இவர் ரொம்பவே பேமஸ்.. சரி, இவரை பற்றிய இவ்வளவு பில்டப் எதற்கு என்றால், விஷயம் இருக்கிறது பாஸ். சமீபத்தில் நடிகர் பிருத்விராஜ் ஒரு கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடலில் பங்குபெற்றார். ஒவ்வொரு மாணவியும் அவரிடம் தங்களது மனதில் நினைத்துவைத்திருந்த கேள்வியை தயக்கமில்லாமல் கேட்டு பதில் பெற்றுக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு மாணவி எழுந்து, சக மாணவிகளிடம் 'சந்தோஷ் பண்ட்டிட்டை உங்களுக்கு தெரியுமா' என கேட்க மாணவிகள் அனைவரும் கோரசாக தெரியும் என கத்தினார்கள்.
உடனே அந்த மாணவி பிருத்விராஜிடம், “சந்தோஷ் பண்டிட் இந்த அளவுக்கு பேமஸான ஆள்.. நாளையே அவர் தனது டைரக்சனில் நீங்கள் நடிக்கவேண்டும் என வேண்டுகோள் வைத்தால் அவரது படத்தில் நடிக்க ஒப்புக்க்கொள்வீர்களா..? இல்லை கோமாளி என அவரை நிராகரித்து விடுவீர்களா..?” என கேள்வி கேட்டு பிருத்விராஜை திகைக்க வைத்தார்.. ஆனாலும் சில நொடிகளில் சுதாரித்துக்கொண்ட பிருத்விராஜ், “சந்தோஷ் பண்டிட் ஆனாலும் சரி, அறிமுக இயக்குனர் ஆனாலும் சரி, யாரிடமும் நான் கதை கேட்க மறுப்பதே இல்லை, அவர்களுக்கான நேரம் ஒதுக்கி கதை கேட்கவே செய்கிறேன். கதை பிடித்திருந்தால் எனது கால்ஷீட் எப்போது ப்ரீயாக இருக்கிறதோ அதை அவர்களுக்கு ஒதுக்கிவிடுவேன். காரணம் நான் யாரையும் குறைத்து மதிப்பிடுவதில்லை” என கூற அங்கிருந்த மாணவிகளிடம் எழுந்த கைதட்டல் அடங்கல் வெகு நேரம் ஆனது.