ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒரு ஹிட் படம் கொடுத்துவிட்டால், ஒரு ஆறு மாதங்கள் ஆறப்போட்டுவிட்டு அதற்கப்புறம் தான் அதன் இரண்டாம் பாகம் எதுவும் எடுக்கிறீர்களா என்கிற கேள்வி கேட்கப்படும். சொல்லப்போனால் அப்படி கேள்வி கேட்கப்பட்ட பின்னர்தான் நம்ம படத்துக்கு ரெண்டாம் பாகம் கூட எடுக்கலாமா என்கிற யோசனையே சில இயக்குனர்களுக்கு தோன்றும். ஆனால் மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் 'புலி முருகன்' படம் வெளியாகி இரண்டு வராம் கூட ஆகாத நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பீர்களா என படத்தின் இயக்குனர் வைசாக்கிடம் கேட்கப்பட்டது..
அதற்கு அவர் “'புலி முருகன்' இரண்டாம் பாகம் எடுப்பதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை.. ஆனால் நிச்சயமாக இன்னும் இரண்டு வருடங்களுக்காவது அது பற்றியே பேச்சே இல்லை. இந்தப்படத்தையே ஒரு தவம் மாதிரி நினைத்து உழைத்த எங்களது யூனிட்டார், இப்போதுதான் விடுதலை பெற்று அவரவர் வீட்டிற்கே சென்றுள்ளார்கள்.. எதிர்காலத்தில் இதே டீம், முதல் படத்திற்கு ஒத்துழைத்த இதே எனர்ஜியுடன் இருக்குமானால் அப்போது தான் இரண்டாம் பாகம் எடுப்பதை பற்றி யோசிக்கவே முடியும்” என கூறியுள்ளார்.