ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நிவின்பாலி தற்போது மலையாளத்தில் இயக்குனர் சித்தார்த் சிவா இயக்கிவரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த சித்தார்த் சிவா புதிய தீரங்கள் என்கிற படத்தில் நிவின்பாலியுடன் முக்கியமான கேரக்டரில் இணைந்து நடித்தபோது அவருடன் நண்பரானவர். அதுமட்டுமல்ல, இரண்டுமுறை தான் இயக்கிய படங்களுக்காக தேசிய விருது வாங்கியவர். கடந்த ஓணம் பண்டிகையன்று மலையாளத்தில் வெளியான நான்கு படங்களில் குஞ்சாக்கோ போபனை வைத்து இவர் இயக்கிய 'கொச்சவ்வா பவுலோ ஐயப்பா கோயிலோ' என்கிற படம் தான் விமர்சன ரீதியாக முதலிடத்தை பிடித்தது.
சில தினங்களுக்கு முன் நிவின்பாலி நடிக்கும் காட்சிகளை கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனை வார்டு ஒன்றில் நடத்தினார் சித்தார்த் சிவா.. அதற்காக முறைப்படி அனுமதியும் பெற்றிருந்தார். ஆனால் திடீரென அங்கு கும்பலாக வந்த கேரள இளைஞர் காங்கிரஸார் ஷூட்டிங்கை நிறுத்தும்படி கூறினார்கள்.. காரணம் இங்கே படப்பிடிப்பை நடத்துவதற்காக படக்குழுவினர் மருத்துவமனை நிர்வாகத்திற்கு செலுத்திய 15000 ரூபாய் மிக குறைச்சல் என்றும் அதிக பணம் கொடுக்கும்படி வற்புறுத்தியும் தகராறு செய்தனர். அதன்பிறகு மருத்துவமனை அதிகாரிகளும் படக்குழுவினரும் கலந்துபேசிய பின் ரூ.30000 கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டு மீதிப்பணத்தை செலுத்திவிட்டு பின்னரே படப்பிடிப்பை துவங்கினாராம்.