தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தற்போது சினிமாவில் நடிகனாக அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், சென்னை லயோலா கல்லூரியில் விஸ்காம் படித்தவர்.. கேரளாவில் ப்ளஸ்டூ படித்துக்கொண்டு இருந்தபோதே, கல்லூரி படிப்பிற்கு அவரை லயோலாவில் தான் சேர்க்கவேண்டும் என தீர்மானம் செய்துவிட்டாராம் ஜெயராம்.. சொல்லப்போனால் மகனை லயோலாவில் படிக்கவைக்க வேண்டும் என்பது ஜெயராமின் லட்சியங்களில் ஒன்று.. ஆனால் அங்கே சேர்க்கவேண்டும் என்றால் 90 சதவீதத்திற்கு குறையாமல் மார்க் எடுக்க வேண்டுமே.. நம் மகன் வெறும் 60 அல்லது 70 சதவீதம் மட்டும் எடுத்தால் என்ன பண்ணுவது என்கிற கவலையும் அவருக்கு இருந்ததாம்.
அந்த சமயத்தில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சி ஒன்றை நடத்திய லயோலா கல்லூரி, அதற்கு சிறப்பு விருந்தினராக ஜெயராமையும் அவரது குடும்பத்தாரையும் அழைத்திருந்தது.. அதை தனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பாகவே கருதினார் ஜெயராம். அந்த விழாவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் கலந்துகொண்ட ஜெயராம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு இந்த கல்லூரியில் தான் தனது மகனை படிக்கவைக்க விரும்புவதாகவும் அது தனது லட்சியம் என்றும் குறிப்பிட்டார்.. கல்லூரி தாளாளரும் மகிழ்ச்சியுடன் சரி என தலையாட்டினாராம்...
ஆனால் ஜெயராமோ இப்படி சொன்னால் போதாது, மேடையிலேயே சத்தியம் செய்து தாருங்கள் என விடாப்படியாக நின்றாராம்.. தாளாளர் தயக்கத்துடன் முழிக்க, ஆயிரக்கணக்கான மாணவர்களும் தாளாளரை பார்த்து சத்தியம் செய்யுங்கள்' என கோரஸாக கோஷம் போட ஆரம்பித்துவிட்டனாராம். தாளாளரும் வேறு வழியின்றி பொதுமேடை என்பதால் சத்தியம் செய்தாராம். அத்துடன் அடுத்த வருடம் சொன்னது போல 75 சதவீதமே வாங்கிய காளிதாஸுக்கு சீட்டும் கொடுத்துவிட்டாராம்.