தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலகிருஷ்ணாவின் 100வது திரைப்படமான கௌதமிபுத்ர சடர்கனி எனும் வரலாற்று திரைப்படத்தில் நாயகியாக நடிக்கும் ஸ்ரேயாவிற்கு மேலும் ஒரு முக்கியத்தும் வாய்ந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தில் ஸ்ரேயா சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான கைதி நம்பர் 150 படத்தை இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கின்றார். லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி முக்கிய வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தில் நடிகை ஸ்ரேயா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றாராம் இப்படத்தின் இரண்டாம் பாதியில் ஸ்ரேயா சம்மந்தபட்ட காட்சிகள் வரும் என்றும் கூறப்படுகின்றது. லைக்கா நிறுவனத்துடன் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரிக்கின்றார்.