பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் மட்டுமல்லாமல், கடந்த இரண்டு வருடங்களாக மற்ற மொழி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார் மோகன்லால். அந்தவகையில் கடந்த வருடங்களில் விஜய்யுடன் ஜில்லா, புனித் ராஜ்குமாருடன் கன்னடத்தில் 'மைத்ரி' ஆகிய படங்களில் நடித்த மோகன்லால், இந்த வருடத்தில் சமீபத்தில் ஒருமாத இடைவெளியில் தெலுங்கில் 'மனமந்தா' மற்றும் 'ஜனதா கேரேஜ்' என இரண்டு படங்களை ரிலீஸ் செய்துவிட்டார்.. இதனால் கடந்த ஒரு வருடமாக மலையாளத்தில் அவரது படம் எதுவும் ரிலீசாகாதா நிலை கூட இருந்தது. ஒரு வருடம் கழித்து சில தினங்களுக்கு முன் தான் மலையாளத்தில் 'ஒப்பம்' படம் வெளியானது..
சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது நடிப்பு பயணம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டிருந்தார்.. அவரது வியாபார எல்லையை விரிவுபடுத்தி அதன்மூலம் அவரது மார்க்கெட் வேல்யுவை அதிகரிக்க நினைக்கும் முயற்சியாகத்தான் வேற்று மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளாரா என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மோகன்லால், “நான் வியாபார பொருள் இல்லை.. நான் ஒரு நடிகன்.. தெலுங்கில் என்னை இயக்கிய இரண்டு இயக்குனர்களும் தங்களது படத்தில் நான்தான் நடிக்கவேண்டும் என வற்புறுத்தி அழைக்கும்போது அதை எப்படி என்னால் தட்டமுடியும்” என விளக்கமளித்து இருக்கிறார் மோகன்லால்.