பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒவ்வொருமுறை ஏதாவது மீடியாவின் நேர்காணலின்போதும் அவர் மறுமணம் செய்துகொள்வது குறித்தும் அவருக்கும் காவ்யா மாதவனுக்குமான நட்பு குறித்தும் தவறாமல் கேள்வி கேட்கப்படுவது வாடிக்கை.. அவரும் இதுநாள் வரை பொறுமையாகவே அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார். சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பின்னேயும் என்கிற படம் மலையாளத்தில் வெளியானது.. இதை முன்னிட்டு ஒரு பிரபல மலையாள பத்திரிகை ஒன்று அவர்கள் இருவரின் புகைப்படத்தை ஜோடியாக அட்டைப்படத்தில் போட்டு, மீண்டும் திலீப் - காவ்யா மாதவன் திருமண பேச்சை பேட்டியிலும் கிளறியுள்ளது..
அதற்கு பதிலளித்த திலீப் “பொதுவாக மகளின் திருமண முடிவை தந்தைதான் எடுப்பது வழக்கம்.. என் விஷயத்திலோ திருமணம் செய்யவேண்டுமென்றால் அதற்கு என் மகளிடம் தான் அனுமதி கேட்கவேண்டும்” என மழுப்பலாக பதில் கூறியுள்ளார்.. இருந்தாலும் விடாப்பிடியாக, காவ்யா மாதவனை மறு திருமணம் செய்து கொள்வீர்களா என கேட்டதற்கு காலம் தான் அனைத்திற்கும் பதில் சொல்லும்” என சூசகமான பதிலையும் சொல்லியுள்ளார் திலீப்..
மலையாள நடிகர் திலீப் தனது மனைவி மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தபின்னரும் கூட அவர்களது மகள் மீனாட்சி தாயுடன் செல்லாமல் தந்தையுடனேயே தங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது