பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா-ஸ்ருதிஹாசன் நடித்த படம் ஏழாம் அறிவு. இந்த படத்தில் டிஎன்ஏ சம்பந்தப்பட்ட கதையை அவர் படமாக்கியிருந்தார். சீனாவில் இருந்து இந்தியாவிற்குள் வந்து நோய் கிருமிகளை பரப்பி விடும் வில்லனை, போதி தர்மரின் வழியில் வந்தவரான சூர்யாவின் டிஎன்ஏவை தூண்டி விட்டு, வில்லனை அழிப்பதுதான் அந்த படம். அதைத் தொடர்ந்து தற்போது மகேஷ்பாபுவை நாயகனாக வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் வாஸ்கோடகாமா படமும் சயின்ஸ் சம்பந்தப்பட்ட கதையில்தான் உருவாகி வருகிறதாம்.
கதைப்படி இந்த படத்தில் மகேஷ்பாபு சயின்டிஸ்டாக நடிக்கிறாராம். அதாவது ஷங்கர் இயக்கத்தில் உருவான எந்திரன் படத்தில் சயின்டிஸ்டாக நடித்த ரஜினி ரோபோவை உருவாக்குவது போன்று, இந்த படத்தில் மகேஷ்பாபு ஒரு மனிதனை உருவாக்குகிறாராம். எதைக்கொண்டு, எப்படி அவர் அந்த மனிதனை உருவாக்குகிறார்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பதுதான் இந்த படமாம். அந்த வகையில், இந்த படத்திற்காக சில மருத்துவத்துறையை சார்ந்த வர்களின் ஆலோசனைகளைப்பெற்று திரைக்கதையை ரெடி பண்ணியிருக்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.