ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இரண்டு தினங்களுக்கு முன் மலையாளத்தில் 'ஆடம்' (ஆதாம்) என்கிற படத்தின் ட்ரெய்லர் வெளியானது.. இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்த்தவர்கள் சோஷியல் மீடியாவில் அதைப்பற்றி புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.. முற்றிலும் புதுமுகங்களை வைத்து உருவாகி இருக்கும் இந்தப்படத்தை சமர் ரஷீத் என்பவர் இயக்கியுள்ளார்.. இப்போது இந்தப்படத்தை பற்றிய இன்னொரு ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், மலையாள முன்னணி நடிகர் பிருத்விராஜ் இந்தப்படத்தின் டைட்டிலை தனக்கு தரும்படி கேட்டும், அந்த இயக்குனர் மறுத்துவிட்டதுதான்.
ஆம். கடந்த வருடம் ஜினு ஆப்ரஹாம் என்பவர் சொன்ன கதை பிடித்துப்போக, அந்தப்படத்தில் தான் நடிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார் பிருத்விராஜ். அந்தப்படத்திற்கும் 'ஆடம்' என்றுதான் பெயர் வைத்திருந்தார்கள்.. ஆனால் பிருத்விராஜ் மற்ற சில படங்களில் பிஸியாக இருந்ததால், இந்தப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அதன்பின்னர் தான் இந்த டைட்டிலில் ஏற்கனவே ஒரு படம் உருவாகி வருவது பிருத்விராஜூக்கு தெரியவந்தது.. உடனே அந்தப்படத்தின் இயக்குனரிடம் டைட்டிலை விட்டுத்தருமாறு பிருத்விராஜ் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது..
ஆனால் அந்த இயக்குனரோ, 'ஆடம்' என்கிற டைட்டிலை வைத்து படத்தை தொடங்கி, இப்போது ட்ரெய்லர் வெளியீட்டுக்கும் வந்துவிட்டோம்.. படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் கதைக்கு இதுதான் பொருத்தமான பெயராக இருக்கும் என பலமுறை ஆலோசித்துத்தான் இந்தப்பெயரை வைத்துள்ளோம். அதனால் டைட்டிலை விட்டுத்தர இயலாது” என நாகரிமாக பதில் சொல்லி அனுப்பிவிட்டாராம்.