இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஒன்பது வருடங்களுக்கு பின்னர் தனது 150வது படத்தில் நடிக்க முடிவெடுத்தார். இரண்டு வருடங்களாக கதை கிடைக்காமல் தவித்த சிரஞ்சீவி வேறுவழியின்றி தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க முடிவு செய்தார். இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் கத்திலான்டோடு என்ற பெயரில் உருவாகிவரும் சிரஞ்சீவியின் 150வது படத்தில் நடிக்க நாயகியை படக்குழு தீவிரமாக தேடியது.
சிரஞ்சீவியுடன் நடிக்க அனுஷ்கா, நயன்தாரா என முன்னணி நடிகைகளை அணுகியபோது, அவர்கள் சம்பளம் அதிகமாக கேட்டதால் பாலிவுட்டிலிருந்து நாயகியை இறக்க இயக்குனர் திட்டமிட்டார். சிரஞ்சீவியின் இணையாக பாலிவுட்டிலும் நாயகி கிடைக்காததால் காஜல் அகர்வாலை நாயகியாக ஒப்பந்தம் செய்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் காஜல் அகர்வாலுக்கு ரூ 2.5 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் செய்திகள் உலா வருகின்றன. படக்குழுவினர் இத்தகவலை விரைவில் உறுதி செய்வர் என டோலிவுட் வட்டார தகவல்கள் கூறுகின்றன.