ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்ட்டார் மகேஷ் பாபு, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வாஸ்கோடகாமா என தற்சமயம் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் நாளை(ஜூலை 29) முதல் துவங்குகின்றன. ஆகஸ்ட் 1 முதல் மகேஷ் பாபு படப்பிடிப்புகளில் கலந்து கொள்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பை பாடலுடன் துவங்க முருகதாஸ் முடிவு செய்துள்ளார். இதற்காக செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றதாம். மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கின்றார்.
எஸ்.ஜே.சூர்யாவிற்கு மனைவியாக நடிகை நதியா நடிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஐதராபாத், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளன. மேலும் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் வெளிவரவுள்ளதால் இரு மொழிகளுக்கும் பொதுவான தலைப்பையே படத்திற்கு வைக்க இயக்குனர் ஏ.ஆர்,முருகதாஸ் முடிவு செய்துள்ளார். மகேஷ் பாபுவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 8ல் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.