ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தங்களது மனதில் உருவாகும் படைப்புகளை திரைவடிவங்களாக உயிர்கொடுத்து, சென்சார் போர்டின் முன்பாக சான்றிதழ் பெற சென்றால் அதை வெட்டு, இதை தூக்கு என அவர்களது அதிகாரம் எல்லை மீறிப்போகிறது என ஒரு பக்கம் பல இயக்குனர்கள் கொந்தளிக்கும் நிகழ்வுகள் நடக்கத்தான் செய்கின்றன.. ஆனால் படைப்பாளிகள் என்கிற பெயரில் இஷ்டத்திற்கு அவர்கள் என்னவேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு வருவார்கள், அதற்கு நாங்கள் எப்படி நற்சான்றிதழ் தரமுடியும் என தங்கள் தரப்பு நியாயத்தை பேசுகிறார்கள் சென்சார் அதிகாரிகள்.
சமீபத்தில் கேரள சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டப்பட்ட 'க பாடிஸ்கேப்ஸ்' என்கிற படத்தை பார்த்த அதிகாரிகள் அந்தப்படத்திற்கு சான்றிதழே தரமுடியாது என கூறிவிட்டனர்.. ஆனால் படத்தின் இயக்குனரான ஜெயன் செரியன் என்பவரோ, மற்றவர்களிடம் சென்சார் அதிகாரிகள் பற்றி குற்றம் சாட்டியுள்ளார். அதனால் தற்போது இந்தப்படத்திற்கு சான்றிதழ் தர ஏன் மறுக்கப்பட்டது என்பது குறித்து மனம் திறந்துள்ளார் சென்சார் அதிகாரி ஒருவர்.