டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு திரை உலகின் உச்ச நட்சத்திரங்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா இருவரும் தங்கள் திரை உலக பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகின்றனர். சிரஞ்சீவி தனது 150வது திரைப்படமான கத்திலான்டோடு திரைப்படத்திலும், பாலகிருஷ்ணா தனது 100வது திரைப்படத்தை வரலாற்று பின்னணியிலும் உருவாக்கி வருகின்றார்.
இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் கௌதமிபுத்ர சாதர்கனி எனும் அவரது 100வது படத்திற்கு பிரபல வசனகர்த்தா சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகின்றார். அதே போல் இயக்குனர் விவி விநாயக் இயக்கும் சிரஞ்சீவியின் 150வது படத்திற்கும் சாய் மாதவ் புர்ரா வசனம் எழுதுகின்றாராம். ஒரே நேரத்தில் சரித்திர படத்திற்கும், சமூக அக்கறை கொண்ட ஆக்ஷன் படத்திற்கு சாய் மாதவ் வசனம் எழுதுகின்றார்.
முன்னணி நடிகர்களின் முக்கிய படங்களில் பணியாற்றும் பெருமை சாய் மாதவ் போல் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திற்கும் கிடைத்துள்ளது. சிரஞ்சீவியின் கத்திலான்டோடு, மற்றும் பாலகிருஷ்ணாவின் கௌதமிபுத்ர சாதர்கனி என இருபடங்களுக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இவ்விரு படங்களுக்கும் ஒரே நேரத்தில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.