கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கதை தேடல் நடந்தது. இறுதியாக இயக்குனர் பூரி ஜெகன்நாத் கூறிய ஆட்டோ ஜானி படத்தில் சிரஞ்சீவி நடிக்க சம்மதம் தெரிவித்தார். வேலைகள் துவங்க இருந்த நேரத்தில் அட்டோ ஜானி படத்தின் இரண்டாம் பாதியில் சில மாற்றங்கள் செய்யுமாறு சிரஞ்சீவி இயக்குனரிடம் கூறினார். ஜெகன்நாத் செய்த மாற்றங்கள் சிரஞ்சீவிக்கு திருப்பி தரததால் அப்படம் கைவிடப்பட்டது. பின்னர் ஆட்டோ ஜானி படத்தில் ரவி தேஜா நடிப்பதாகவும் கூறப்பட்டது.
தற்போது விஜய் நடித்த கத்தி திரைப்படம் கத்திலான்டோடு என்ற பெயரில் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமாக ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்தின் முற்கட்ட படப்பிடிப்புகள் நடைபெறுகின்றது. இந்நிலையில் சிரஞ்சீவியின் 151வது திரைப்படமாக ஆட்டோ ஜானி படத்தை உருவாக்க இயக்குனர் பூரி ஜெகன்நாத் திட்டமிட்டுள்ளாராம். இரண்டாம் பாதியை முழுவதுமாக மாற்றி அமைத்துள்ள ஜெகன்நாத் சிரஞ்சீவியைச் சந்திக்க முயற்சி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. தற்போது கல்யாண் ராம் நடிப்பில் ஐஎஸெஎம் எனும் படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கிவருகின்றார்.