இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விவகாரத்து பெற்ற பின் மலையாள நடிகர் திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் ஒருவரை ஒருவர் தாக்கி எந்தவித கருத்துகளும் சொல்லாமல் அமைதியாகவே தங்களது வேலைகளை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் “என் மகள், அவள் யாரிடம் இருக்க விரும்புகிறாளோ இருக்கட்டும். அவள் திலீப்புடன் இருக்கிறேன் என்று சொன்னாலும் நான் அதற்காக சண்டைபோட மாட்டேன். என்னிடம் இருப்பதை விட பத்திரமாகவே அங்கே இருப்பாள். அவள் விரும்பும்போது என் வீட்டிற்கு வந்து பார்த்துக்கொள்ளட்டும்” என்று முன்பே கூறிவிட்டார் மஞ்சு வாரியர்.
அதேபோல் இன்னொரு திருமணம் அதாவது எதிர்காலம் குறித்த எதையும் திட்டமிட்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விழா ஒன்றில் கலந்துகொண்டார் திலீப், அவருக்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்களுக்குமான கலந்துரையாடலும் நடைபெற்றது. அதில் ஒரு குடும்பத்தலைவி திலீப்பிடம், “நீங்கள் ஏன் உங்கள் மனைவியுடன் திரும்பவும் சேர்ந்து வாழ கூடாது” என்று கேட்டார். சில வினாடிகள் திகைத்த திலீப், சுதாரித்துக்கொண்டு, ”நான் பொதுவாக அடுத்தவர் விஷயங்களில் தலையிடமாட்டேன்” என சிரித்துக்கொண்டே கூறினார்.
அதாவது நான் உங்கள் பெர்ஷனல் விஷயத்தில் தலையிட மாட்டேன் என்பதுபோல, நீங்களும் என் விஷயத்தில் தலையிட வேண்டாம் என மறைமுகமான பதிலாக இருந்ததால் கேள்விகேட்டவரின் முகம் வாடிப்போனதாம்.