அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் உலக புகழ்பெற்ற அப்படத்தின் நாயகன் பிரபாஸிற்கு விருதுகள் எதுவும் கிடைக்காதது அவரது ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த சைமா விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த வில்லன், இயக்குனர், ஒளிப்பதிவாளர், துணை நடிகை போன்ற பிரிவுகளில் பாகுபலி திரைப்படம் விருது வென்றது. ஆனால் நாயகன் பிரபாஸிற்கு விருது கிடைக்கவில்லை.
அதே போல் பிலிம்பேர், சினிமா போன்ற குறிப்பிடத்தகுந்த விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் தற்போது நடந்த சைமா விருது நிகழ்ச்சியிலும் பிரபாஸிற்கு விருது கிடைக்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் பிரபாஸ் இதற்கிடையில் வேறு படங்களில் ஒப்பந்தமாகாமல் மூன்று வருடங்களுக்கும் மேலாக பாகுபலி படத்தில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.