வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இதுவரை 149 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவி, பிரஜா ராஜ்ஜியம் என்ற தனிக்கட்சியை தொடங்கி, அதையடுத்து காங்கிரசில் இணைந்து மத்திய அமைச்சரானார். ஆனால் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோற்ற அவர், மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ளார். முன்னதாக தனது மகன் ராம்சரண்தேஜா தெலுங்கில் நடித்த புருஸ்லீ என்ற படத்தில் நட்புக்காக ஒரு சிறிய வேடத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்த சிரஞ்சீவி தற்போது தனது 150 வது படமான கத்திலன்டோடு படத்தில் நடித்து வருகிறார்.
தமிழில் விஜய் நடித்து வெளியான கத்தி படத்தில் ரீமேக்கான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். மேலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பதால் முன்பிருந்த வேகம் அவரிடத்தில் இருக்காது என்றுதான் ஆந்திர ரசிகர்கள் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால் சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சிக்காக அவரை வைத்து ஒரு எபிசோட் படமாக்கியுள்ளனர். அதில் தனது முந்தைய சூப்பர் ஹிட் படங்களில் தான் நடித்த சில காட்சிகளில் மீண்டும் அதே வேகத்துடன் நடித்துக்காட்டி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி விட்டாராம் சிரஞ்சீவி.