டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அப்போலோ மருத்துவமனையில் இருக்கின்றார் என தகவலறிந்து முதலில் சோகமடைந்த அவரது ரசிகர்கள் படப்பிடிப்பிற்காகவே சிரஞ்சீவி மருத்துவமனைக்கு சென்றுள்ளார் என தெரிந்ததும் நிம்மதி அடைந்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வரும் அவரது 150வது திரைப்படம் குறித்த தகவல்களுக்குதான் டோலிவுட்டில் தற்போது மவுசு அதிகம்.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி திரைப்படம் இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் சிரஞ்சீவி இரட்டை வேடங்களில் நடிக்க கத்திலான்டோடு என்ற பெயரில் தெலுங்கில் தயாராகி வருகின்றது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்ற இப்படத்தின் சில காட்சிகளுக்கான படப்பிடிப்பு அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. இதில் சிரஞ்சீவி கலந்து கொண்டுள்ளார்.
மேலும் ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் கொல்கத்தா செல்லவுள்ளதாம். பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வரும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் சிரஞ்சீவி படத்தின் இசையமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றாராம். இதனால் அறிவிக்கப்பட்ட படி 2017 பொங்கலுக்கு இப்படம் திரைக்கு வரும் என தெரிகிறது.