‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னாள் கதாநாயகியும் தற்போதைய அரசியல் பிரமுகருமான ரோஜா அரசியலுடன் சின்னதிரை நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார். மக்களின் குறைகளை தீர்க்கும் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றையும் ரோஜா தொகுத்து வழங்கவுள்ளார். ரச்சபந்த என பெயரிடப்பட்டுள்ள அந்நிகழ்ச்சி விரைவில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிகழ்ச்சியின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரோஜா தான் ஒரு ஏர் கோஸ்டஸாக விரும்பியதாகவும் ஆனால் எதிர்பாராத விதமாக நடிகையாக மாறி தற்போது அரசியலுக்கும் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார். பல வகையான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள ரோஜா பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிப்பை கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் இயக்குனர் ராஜமௌலியின் கைவண்ணத்தில் சிவகாமியாக ரம்யாகிருஷ்ணன் தன்னை கவர்ந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.