தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கவிருக்கும் அவரது 150வது திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஜுன் 6ல் துவங்கவுள்ளன. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் 'கத்திலாண்டோடு' என்ற பெயரில் சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகவுள்ளது. இயக்குனர் விவி விநாயக் இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழில் இயக்குனர் சங்கரின் எந்திரன் உள்ளிட பல வெற்றி படங்களில் பணியாற்றிய ரத்னவேலு தெலுங்கிலும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். அண்மையில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியான பிரம்மோற்சவம் படத்தின் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு தான். அவரே தற்போது சிரஞ்சீவியின் 150வது படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கின்றார். 2017 ஜனவரியில் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது