அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
கடந்த சில தினங்களுக்கு முன் கேரளா மாநிலம் பெரும்பாவூர் பகுதியை சேர்ந்த சட்டக்கலூரி மாணவியான ஜிஷா என்பவர் சில மனித மிருகங்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்டார். கிட்டத்தட்ட டில்லியில் நிர்பயாவுக்கு நேர்ந்த கொடூரத்திற்கு இணையாக இதை அனைவரும் குறிப்பிடுகிறார்கள். சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகே வெளியே தெரியவந்துள்ள இந்த கொடூரத்திற்கு எதிராக மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கண்டனக்குரல் கொடுத்து வருகிறார்கள். இப்போது நடிகர் பிருத்விராஜும் தனது முகநூலில் இதுபற்றி கொந்தளித்துள்ளார்..
“இதுபோல சம்பவம் இன்று மட்டும் தான் நடக்கிறது என நினைக்கிறீர்களா..? சாதாரண செய்தித்தாளில் ஏதோ ஒரு பக்கத்தில் 3க்கு 4 என்கிற செய்தியாக அடிக்கடி வந்து கொண்டு தான் இருக்கிறது. அனைவருமே இது டில்லியில் தானே நடந்தது.. நமக்கு நடக்கவில்லையே... பெரும்பாவூரில் தானே நடந்தது.. நம் வீட்டில் உள்ளவருக்கு நடக்கவில்லையே என விலகுகிறோம். ஒவ்வொருமுறை இப்படி கொடூரம் நிகழும்போதும் அடுத்தமுறை இப்படி நிகழ்ந்தால் பார்த்துக்கொள்வோம் என ஒதுங்குகிறோம். ஏன் அடுத்தமுறை..? இந்தமுறை ஏதும் செய்யக்கூடாதா..? செய்ய முடியாதா..? தயவுசெய்து மௌனத்தை கொன்று அநீதிக்கு எதிராக போராட வெளியே வாருங்கள்” என குறிப்பிட்டுள்ளார் பிருத்விராஜ்.