துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார் என்பது அறிந்ததே. இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் உருவாகும் இப்படம் சிரஞ்சீவியின் 150வது படமாக உருவாகவுள்ளது. இப்படத்தில் நடிக்க சாய் தரண் தேஜ் விருப்பம் தெரிவித்துள்ளார். மெகா ஸ்டார் குடும்ப வாரிசும் வளர்ந்து வரும் நடிகருமான சாய் தரண் தேஜ் அண்மையில் சிரஞ்சீவியின் 150வது படபூஜையில் கலந்து கொண்டார். மேலும் தற்போது தனது சுப்ரீம் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கும் சாய் தரண் சிரஞ்சீவியின் 150வது படத்தில் சிறிய வேடத்திலாவது நடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். மே 5ல் திரைக்கு வரும் சுப்ரீம் படத்தில் சாய் தரண் தேஜுடன் ராக்ஷி கண்ணா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சிரஞ்சீவியின் புகழ்பெற்ற பாடல் ஒன்றையும் ரீமேக் செய்து சாய் தரண் தேஜ் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.