திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
ஒரு மாபெரும் கலைஞனான கலாபவன் மணியின் இழப்பை இன்னும் கூட தாங்கமுடியாமல் பல ரசிகர்கள் கேரளாவில் தங்களைது துக்கத்தை வெவேறு தருணங்களில் வெளிப்படுத்தி வருகிறார்கள். இயற்கையான மரணமாக இருந்திருந்தால் கூட அந்த சோகம் சில நாட்களில் மெல்ல மெல்ல மறையும். ஆனால் அவரது மரணம் சிலரால் ஏற்படுத்தப்பட்டது என போலீஸாரின் விசாரணையில் தெரியவந்ததால், ஒரு நல்ல மனிதரின் உயிரை பறித்த அந்த கயவர்கள் யார் என தெரிந்துகொள்ள கேரளா மக்கள் அனைவருமே கொஞ்சம் கோபத்துடனே, சோகம் மாறாமல் காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் கலாபவன் மணியின் மறைவுக்காக நினைவஞ்சலி கூட்டம் ஒன்று நடைபெற்றது.. இதில் கலந்துகொள்ள ஒரு பிரபல நடிகரை அழைத்தபோது, அவர் 50 ஆயிரம் ரூபாய் தந்தால் தான் வருவேன் என சொல்லி கூட்டத்தை புறக்கணித்த விஷயம் தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. இத்தனைக்கும் அந்த நடிகர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் தான் என்றும் அதே ஊரில் இருந்துகொண்டே பணம் கொடுக்காததால் அவர் வர மறுத்தது மோசமான செயல் என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த செய்தியை கசியவிட்டவர்கள் அவரது பெயரை மட்டும் சொல்லாமல் மறைத்துவிட்டார்கள். இருப்பினும் சில நாட்களில் அவர் யார் என்பது தெரியவரும் என்று சொல்லப்படுகிறது.