கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் இயற்கையானதல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின், போலீஸாரின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இதுவரை சுமார் 200 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.. கலபாவன் மணியின் சினிமா நண்பர்களான ஜாபர் இடுக்கி மற்றும் சாபுமோன் ஆகியோர் கலாபவன் மணியின் கடைசி மணித்துளிகளில் அவருடன் இருந்ததால் அவர்களை சந்தேக வளையத்திற்குள் கொண்டுவந்த போலீஸார் துருத்துருவி விசாரித்துனர். அடுத்த அதிரடியாக கலாபவன் மணியின் பட்டி என்கிற அவுட் ஹவுஸில் வேலைபார்த்த அவரது வேலைக்காரர்கள் மூவரையும் தடயங்களை அழித்தார்கள் என்கிற காரணத்தால் போலீஸார் கைது செய்தனர்.
இப்போது லேட்டஸ்ட் தகவலாக கலாபவன் மணியின் மாமனார் கடையில் பூச்சி மருந்து வாங்கினார் என்கிற தகவல் சம்பந்தப்பட்ட கடைக்காரரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மணியின் பிரேத பரிசோதனையில் அவரது உடலில் பூச்சி மருந்து கலந்து இருந்ததாக மருத்துவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். அதனால் மணியின் மாமனாரை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே மணியின் மாமனார் இதன் பின்னணியில் இருக்க வாய்ப்பு உள்ளது குறித்து உறுதிப்படுத்தும் விதமாக சில தகவலகள் கசிந்துள்ளன.
மணியின் நண்பர்கள் சிலரிடம் போலீஸார் விசாரித்ததில் வலி நிவாரணி என்கிற கிட்டத்தட்ட போதை மருந்துக்கு சமமான மருந்தை கலாபவன் மணி நேரடியாக பயன்படுத்தி வந்தார் என்றும், இந்த மருந்தை பெறும் விஷயத்தில் இடுக்கியை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்றும் சொல்லப்படுகிறது. இதனாலேயே மணிக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் மணி தனது மனைவியை விவாகரத்து செய்தாலும் செய்துவிடுவார் என மணியின் மனைவி குடும்பத்தினர் பயந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால்தான் மணி இறந்ததாக சொல்லப்படும் அவரது அவுட் ஹவுசில் இருந்து கூப்பிடும் தொலைவில் மணியின் மனைவி அவர்களது இன்னொரு வீட்டில் வசித்து வந்தாலும் கூட, கடந்த பிப்-20க்குப்பின் அவர் தனது கணவரை போய் பார்க்கவில்லை என்பது இதை உறுதிப்படுத்துகிறது. அதனால் தனது மகளின் வாழ்க்கை குறித்து கவனித்து வந்த மணியின் மாமனார் விபரீதமாக முடிவெடுத்தாலும் எடுத்திருக்கலாம் என்கிற சந்தேகம், தற்போது அவர் பூச்சி மருந்தை வாங்கியதன் மூலம் வலுப்பட்டு இருக்கிறது..
இன்னொரு பக்கம் தற்போது கைது செய்யப்பட்டுள்ள மணியின் வேலைக்காரர்களில் ஒருவரான விபின், கடந்த சில நாட்களாகவே கலாபவன் மணி பயங்கர மன அழுத்தத்தில் இருந்தார் என்றும் தன்னையும் கைதுசெய்யப்பட்ட மற்ற இருவரையும் அழைத்து நீங்கள் வேறு எங்காவது வேலைதேடிக்கொள்ளுங்கள் என கூறினார் என்றும் சொல்லியுள்ளாராம். கல்லீரல் டயாக்னைசிங்கிற்கு பிறகு மணி கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சினிமாவைவிட்டு விலகிவிடப்போவதாக சொல்லிக்கொண்டு இருந்தார் என்று மணியின் நண்பர்களில் சிலரும் கூறியுள்ளார்கள்.
இன்னும் ஒருசில தினங்களில் கலாபவன் மரணத்தின் உண்மையான சூத்திரதாரி யார் என்பது தெரிந்துவிடும் என போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.. காரணம் கேரளா முதலமைச்சர் உம்மன் சாண்டி இந்த வழக்கில் தனி கவனம் செலுத்த அறிவுறுத்தி உள்ளாராம்.