தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ப்ரூஸ் லீ படத்திற்கு பின்னர் ராம் சரணும் ராகுல் ப்ரீத்தி சிங்கும் ஜோடி சேர்ந்து நடிக்கும் திரைப்படம் துருவா. கிக் படப்புகழ் இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படம் தமிழில் ஜெயம் ரவி நயன்தாரா நடிப்பில் வெற்றி பெற்ற தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக் ஆகும். ஐதரபாத்தில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு பாங்காக் சென்றுள்ளது. நேற்று முதல் அங்கு படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்த பின்னர் ஐதராபாத் திரும்பும் படக்குழு இப்படத்தின் முக்கிய காட்சிகளை அங்கு படமாக்க திட்டமிட்டுள்ளது. தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்த அரவிந்த் சாமி இப்படத்திலும் வில்லனாக நடிக்கின்றார். ஹிப்பாப் தமிழா ஆதி இசையமைக்கும் இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் தயாரிக்கின்றார்.