ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கலாபவன் சாஜன்... மோகன்லால் நடித்த 'த்ரிஷ்யம்' படத்தில் அவருக்கு ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை டார்ச்சர் கொடுக்கும் கான்ஸ்டபிள் சகாதேவனாக பளிச்சென ரசிகர்களின் மனதில் சம்மணமிட்டு அமர்ந்தவர். தொடர்ந்து காமெடி நடிகராக நடித்துவந்த கலாபவன் சாஜன், சமீபத்தில் வெளியான பிருத்விராஜின் 'பாவாட' படத்தில் வயதான வில்லன் கதாபாத்திரத்தில் மீண்டும் பாராட்டுக்களை அள்ளிச்சென்றார். ஆனாலும் காமெடி நடிகர்களான சலீம் குமார், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோரைப்போல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து எப்படியாவது ஒருமுறை தேசியவிருது வாங்கிவிட வேண்டும் என்பதுதான் அவரது தற்போதைய ஆசை, கனவு எல்லாம்..
அதற்கேற்ற மாதிரி 'பரீத் பண்டாரி' என்கிற படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவந்துள்ளது.. அதற்காக டூயட் பாடும் ஹீரோ என நினைக்கவேண்டாம். இந்தப்படத்தில் மூன்று பெண் குழந்தைகளுக்கு தந்தையாக நடிக்க இருக்கிறார் சாஜன். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் 'ஷட்டர்' புகழ் சஜிதா மாடத்தில். இதில் சாஜன் கல்யாண வீடுகளுக்கு பிரியாணி செய்யும் சமையற்காரர் ஆகவும் சஜிதா இயற்கை முறையில் பிரசவம் பார்க்கும் அனுபவம் மிக்க செவிலியாகவும் நடிக்கிறார்களாம்.
அழகற்ற பெண்கள் என சமூகத்தால் ஒதுக்கப்படும் தங்களது மகள்கள் மூவரின் வயதும் கடந்துகொண்டிருப்பதை கண்டு, அவர்களது திருமணத்திற்கு எப்போது பிரியாணி சமைப்போம் என சாஜன் ஏங்குகிறார்., அவர்களுக்கு எப்போதும் தனது கையால் பிரசவம் பார்த்து பேரக்குழந்தைகளை பார்ப்போம் என மனைவி சஜிதா ஏங்குகிறார். ஆக, தேசியவிருது பெறுவதற்கு தகுதியான கதை இந்தப்படத்தில் இருக்கிறதாம். அதனால் நம்பிக்கையாக இருக்கிறார் கலாபவன் சாஜன்.