Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராஜேஷ் பிள்ளையின் உயிருக்கு எமனாக மாறிய குளிர்பானம்..!

28 பிப், 2016 - 18:05 IST
எழுத்தின் அளவு:
Due-to-Cooldrinks----Rajesh-Pillai-Died

பிரபல மலையாள இயக்குனர் 'ட்ராபிக்' புகழ் ராஜேஷ் பிள்ளை நேற்று மரணமடைந்தது மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் பலரால் இந்த செய்தியை நம்பவே முடியவில்லையாம். 41 வயதே ஆன ராஜேஷ் பிள்ளை, நீண்ட நாட்களாக கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு அதற்கு தகுந்த சிகிச்சை எடுக்காததால், அதாவது மாற்று கல்லீரல் அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டதுதான் அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.. கல்லீரல் பாதிப்பு என்பதால் ராஜேஷ் பிள்ளை அதிகமாக மது அருந்துவார், புகை பிடிப்பார் என யாரும் நினைக்கவேண்டாம் அதில் உண்மையும் இல்லை என கூறியுள்ளார் ராஜேஷ் பிள்ளையின் நண்பரான சுப்ரமணியன் சுகுமாரன்..



இதுகுறித்து முகநூலில் அவர் இட்டுள்ள பதிவில், “ராஜேஷுக்கு சிகரெட், ட்ரிங்க்ஸ் என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.. ஆனால் ஒருநாளைக்கு முப்பது முறையாவது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் குளிர்பானம் ஒன்றை தொடர்ந்து குடிப்பார்.. அத்துடன் சரியாக உணவும் உட்கொள்ளாமல், வேலைப்பளு காரணமாக அந்த நேரத்திற்கு கையில் கிடைக்கும் ரெடிமேட் ஸ்நாக்ஸ்களை மட்டுமே சாப்பிடுவார்.. ஏற்கனவே சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் அதிகமாக குடித்த அந்த குளிர்பானமும் ஜங் புட்டும் தான் கல்லீரல் பிரச்சனைக்கு காரணம் என்றும் கூறினார்” என குறிப்பிட்டுள்ளார் சுகுமாரன்..



ராஜேஷ் பிள்ளைக்கு சிறுவயதில் இருந்தே ஊசி போட்டுக்கொள்வது என்றால் ரொம்பவே பயமாம். ஆனால் நோயின் தாக்கத்தை குறைக்க வேறு வழியில்லாமல் ஊசியும் அவரது வாழ்க்கையில் தவிர்க்கமுடியாத ஒரு உபகரணமாகவே ஆகிவிட்டது தான் சோகம்.. மருத்துவரின் ஆலோசனைக்குப்பின் அந்த குளிர்பானத்தை குடிப்பதை ராஜேஷ் பிள்ளை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தாலும், அது ஏற்படுத்திய தாக்கம் தனது வேலையை ராஜேஸின் உடலில் ஏற்கனவே காட்டிவிட்டதால் நிலைமை கைமீறி போய்விட்டதாகவும் அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in