இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நாகார்ஜுனா - அமலா
தமிழகத்தில் கமல் - ஸ்ரீதேவி, ரஜினிகாந்த் - ஸ்ரீப்ரியா போன்று தெலுங்கில் பெரிதும் விரும்பப்பட்ட காதல் ஜோடிகளுள் ஒன்று நாகார்ஜுனா - அமலா இணை. இயக்குனர் நடிகர் டி.ராஜேந்திரன் அவர்களால் மைதிலி என் காதலி எனும் தமிழ் படத்தின் வாயிலாக திரை உலகிற்கு அறிமுகமான நடிகை அமலா தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான நாகார்ஜுனாவை காதலித்து கரம் பிடித்தார். நாகார்ஜுனா - அமலா தம்பதியரின் மகன் அகிலும் தற்போது நடிக்க வந்துவிட்டார்.
ராஜசேகர் - ஜீவிதா
தமிழ் திரை உலகின் முன்னாள் கதாநாயகியான ஜீவிதா தெலுங்கு திரை உலகின் ஆக்ஷன் ஹீரோவான நடிகர் ராஜசேகருடன் இணைந்து நடிக்கும் போது காதல் வயப்பட்டு ராஜசேகரை வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தமிழகத்தின் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜசேகர் தெலுங்கில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். இணைபிரியாத ராஜசேகர் மற்றும் ஜீவிதா தம்பதியருக்கு ஷிவானி, ஷிவாத்மிகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஸ்ரீகாந்த் - ஊஹா
தாலாட்டு, வண்டிச்சோலை சின்ராசு, போன்ற தமிழ்படங்களில் நடித்த நடிகை சிவரஞ்சனி தெலுங்கில் ஊஹா எனும் படத்தில் நடித்து புகழ்பெற்றது முதல் ஊஹா என்ற அழைக்கப்படுகின்றார். நடிகை சிவரஞ்சனி தன்னுடன் மூன்று படங்கள் தொடர்ந்து நடித்த நடிகர் ஸ்ரீகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 90களில் தெலுங்கு படங்களில் நாயகனாக நடித்த ஸ்ரீகாந்த் தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். சிவரஞ்சனி திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை தவிர்த்து விட்டார். ஸ்ரீகாந்த் - சிவரஞ்சனி தம்பதியருக்கு ரோஷன், ரோஹன் என இரண்டு மகன்களும் மேதா எனும் மகளும் உள்ளனர்.
மகேஷ் பாபு - நம்ரதா
மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மகனான மகேஷ் பாபு டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டாராக திகழ்கின்றார். முன்னாள் இந்திய அழகியான நம்ரதா ஷிரோட்கரை மகேஷ் பாபு காதலித்து கரம் பிடித்தார். மாரத்தி நடிகை மீனாட்ஷி ஷிரோட்கரின் பேத்தியான நம்ரதா பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். வம்சி எனும் தெலுங்கு படத்தில் மகேஷ் பாபுவும் நம்ரதாவும் ஜோடி சேர்ந்து நடிக்கையில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. நம்ரதாவைவிட இரண்டு வயது இளையவரான மகேஷ்பாபுவின் காதலுக்கு அவரது வீட்டில் எதிர் தெரிவிக்கவே எதிர்ப்புகளை மீறி நம்ரதாவை மகேஷ் பாபு மும்பையில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் திரை உலகின் வெளிச்சத்திற்கு வராத நம்ரதா முழு நேர குடும்பத்தலைவி ஆகிவிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணமான 11 ம் ஆண்டை மகேஷ் பாபுவும் நம்ரதாவும் குடும்பத்தினருடன் சிறப்பாக கொண்டாடினர்.மகேஷ் பாபு - நம்ரதா தம்பதியருக்கு கௌதம் கிருஷ்ணா எனும் மகனும் சித்தாரா எனும் மகளும் உள்ளனர்.
அல்லு அர்ஜுன் - சினேகா ரெட்டி
பிரபல தயாரிப்பாளரான அல்லு அரவிந்தின் மகனும் தெலுங்கு திரை உலகின் ஸ்டையில் நாயகனுமான அல்லு அர்ஜுன் தொழிலதிபரின் மகளான சினேகா ரெட்டியை காதலித்து மணந்தார். நண்பரின் திருமணத்தில் சினேகாவை பார்த்ததும் மையல் கொண்ட அல்லு அர்ஜுன் நண்பர்களாக பழகிய பின்னர் தனது காதலை சினேகாவிடம் கூறியுள்ளார். முதலில் மறுத்த சினேகாவை தனது காதலால் கனிய வைத்து விட்டார் அல்லு அர்ஜுன். இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தும் தங்கள் காதலில் விடாப்பிடியாய் இருந்த அல்லு அர்ஜுன் சினேகா ஜோடி பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அல்லு அர்ஜுன் - சினேகா தம்பதியருக்கு அல்லு அயான் எனும் ஆண் குழந்தை உள்ளது.
ராம் சரண் - உபசேனா
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தேஜ் தனது பள்ளி தோழியான உபசேனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அபோலோ மருத்துவ குழுமங்களின் தலைவர் பிரதாப் சி ரெட்டியின் பேத்தியான உபசேனாவும் ராம் சரணும் பள்ளிப்பருவங்களை ஒன்றாக கழித்துள்ளனர். பின்னர் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறிய ராம் சரணும் உபசேனாவும் பெற்றோர் சம்மதத்துடன் இந்தியாவின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் இந்திய திரை உலக சூப்பர் ஸ்டார்கள் முன்னிலயில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். படப்பிடிப்பு காரணமாக காதல் கணவர் மாதத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வருவதாக குறைபட்டுக் கொள்ளும் உபசேனா, ராம் சரணுடன் இணைந்து ஒரு காதல் கதையம்சம் படத்தில் நடிக்கவும் திட்டமிட்டிருக்கின்றாராம்.
நாணி - அஞ்சனா
நாணி நடிகராக மாறுவதற்கு முன்னர் வானொலியில் வர்னனையாளராக இருந்த போது அவருடைய நிகழ்ச்சிக்கு வழக்கமாக பேசும் அழைப்பாளராய் அறிமுகமான அஞ்சனா பின்னர் பேஸ்புக்கிலும் நண்பரானார். பரஸ்பர அறிமுகம் கடந்து இருவரும் நண்பர்களாக மாறியுள்ளனர். நட்பு காதலாய் மாறி ஐந்து வருட காதல் வாழ்க்கைக்கு பின்னர் நாணியும் அஞ்சனாவும் திருமணம் செய்து கொண்டனர்.