'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் |
தெலுங்கு திரை உலகின் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆர் நானாகு பிரேமதோ படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜனதா கேரச் படத்தில் நடிக்க தயாராகி வருகின்றார். மகேஷ் பாபு நடித்த ஸ்ரீமந்துடு படத்தை இயக்கிய கொரடலா சிவா இயக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு பிப்ரவரி 20 ஆம் தேதியிலிருந்து துவங்கவுள்ளது. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், மற்றும் மலையாள திரை நட்சத்திரங்களான நித்யா மேனன், உன்னி முகுந்தன் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ள இப்படத்தின் கதை மாஃபியா கும்பலை மையப்படுத்தியதாகவும் இதில் ஜுனியர் என்.டி.ஆர் மாஃபியா டானாகவும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐதராபாத்தில் படப்பிடிப்பை முடித்த பின்னர் படக்குழு மும்பையில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது.