ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த சில வருடங்களாக தமிழில் நடிக்காமல் பாலிவுட்டிலேயே செட்டிலாகிவிட்ட மாதவன், இறுதிச்சுற்று படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க தீர்மானித்துள்ளார். புதிய தமிழ்ப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன் ஒரு மலையாளப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் மாதவன். இந்தப்படத்தை நடிகர் பிரதாப் போத்தன் இயக்குகிறார்.
'மீண்டும் ஒரு காதல் கதை', 'வெற்றிவிழா', 'சீவலப்பேரி பாண்டி', 'ஆத்மா' உட்பட பல தமிழ் படங்களையும் சில மலையாள படங்களையும் இயக்கியவர் பிரதாப் போத்தன். இவர் கடைசியாக இயக்கிய மலையாள படம் 'ஒரு யாத்ரா மொழி'. சிவாஜி கணேசன், மோகன்லால் நெப்போலியன் ஆகியோர் இணைந்து நடித்த இப்படம் கடந்த 1995-ல் வெளியானது. அதன் பிறகு படங்களை படங்களை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. எனவே சின்ன வின்ன வேடங்களில் நடித்து வந்த பிரதாப் போத்தன் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறர்.
'Love In Anjengo' என்று ஆங்கிலப் பெயர் சூட்டப்பட்டிருந்தாலும் இப்படம் மலையாளத்தில் தயாராகிறது. தமிழ், தெலுங்கில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். 'பெங்களூர் டேஸ்' படத்தின் இயக்குநரான புகழ் அஞ்சலி மேனன் இப்படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்க, படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில்தான் மாதவன் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் துவங்கும் என்கிறார்கள்.