ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கடந்த இரண்டு வருடங்களாக மலையாளத்தில் நிவின்பாலியின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் நிவின்பாலியின் மார்க்கெட் உயர்ந்து வருவதோடு அவரது கால்ஷீட் கிடைப்பதும் குதிரைக்கொம்பாகி விட்டது. சொல்லப்போனால் கால்ஷீட்டை சரியாக பராமரிப்பதில் நிவின்பாலி சிரமப்படுகிறார் என்றே சொல்லப்படுகிறது.. அதனால் தான் பிரபல இயக்குனர் லால் ஜோஸின் படத்தில் நடிப்பதாக வாக்கு கொடுத்துவிட்டு, அதன்பின் அவருக்கு சரியான தேதிகள் தராமலேயே இழுத்தடித்தாராம். ஆனால் தனது நண்பர்கள் படத்துக்கு மட்டும் கால்ஷீட் கொடுப்பதில் எந்த தயக்கமும் காட்டவில்லையாம் .
லால்ஜோஸ் பலமுறை முயற்சித்தும், நிவின்பாலியிடம் இருந்து சரியான பதில் வராததால் இப்போது நிவின்பாலியை தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக இரண்டாம் நிலை கதாநாயகன் ஒருவரை தனது படத்திற்கு ஒப்பந்தம் செய்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் நிவின்பாலி கடந்த 2014ல் லால் ஜோஸ் இயக்கிய 'விக்ரமாதித்யன்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தவர் தான். ஆனால் இந்த இரண்டு வருடங்களில் தான் அவரது நிலைமை அப்படியே மாறிவிட்டதே என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
இது ஒருபக்கம் இருக்க, லால்ஜோஸின் புதிய படத்தக்கு கதை எழுதும் இரட்டை எழுத்தாளர்களான பாபி-சஞ்சய் இருவருக்கும் நிவின்பாலியுடன் சேர்ந்து வேலை பார்ப்பதில் விருப்பம் இல்லை என்று சொல்லப்படுகிறது. காரணம் கடந்த வருடம் தங்களது குருநாதர் சிபிமலயில் படத்தில் இருந்து நிவின்பாலி வெளியேறிய கோபம் தான் என்று சொல்லப்படுகிறது. அதனால் தான் நிவின்பாலிக்கு கதை சொல்ல தாங்கள் போகாமல், ஒரு உதவி இயக்குனரை அனுப்பி கதைசொல்ல வைத்தார்களாம். இதனால் வருத்தப்பட்ட நிவின்பாலி, இந்த புராஜெக்ட்டில் இருந்து ஒதுங்கிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது. லால் ஜோஸின் உறுதியான அறிவிப்பு வெளியானால் உண்மை இதுதான் என்பது விளங்கிவிடும்.