டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிக்க வந்து, மார்க்கெட் பிக்கப்பாகி சரியாக இரண்டு, மூன்று வருடங்கள் மட்டுமே கதாநாயகியாக நடித்துவிட்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார் அமலாபால். இருந்தாலும் நல்ல கதைகளும் கேரக்டர்களும் வந்தால் நடிக்கலாம் என்கிற சினிமா மரபை மீறாமல் கணவர் அனுமதியுடன் நடித்து வருகிறார். அப்படி தேடிவந்த படம் தான் 'பசங்க-2'. சூர்யாவுக்கு ஜோடி, குழந்தைகளுக்கான படம் என அந்த படம் பிடித்துப்போக அதில் வெண்பா டீச்சராக தனது வேடத்தை சிறப்பாக செய்து பாராட்டு பெற்றார் அமலா பால்..
இதேபோல மலையாளத்திலும் இரண்டு குழந்தைகளை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை ஒன்றில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் அமலாபால். படத்தின் பெயர் '2 பெண்குட்டிகள்', இதில் சமூக ஆர்வலராக நடித்துள்ளார் அமலாபால். இந்தப்படம் ஏற்கனவே தயாராகி, ஒடிசா சர்வதேச திரைப்படவிழா மற்றும் பூஷன் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றுள்ளது. இரண்டு குழந்தைகள் கதாபாத்திரங்களில் அன்னா பாத்திமா, சாம்பவி என இரண்டு சிறுமிகள் நடித்துள்ளனர். இந்தப்படம் இன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டிலும் வெளியாகியுள்ளது.