'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கவிருக்கும் அவரது 150வது திரைப்படம் விஜய் நடிப்பில் தமிழில் வெளிவந்த கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸுடன், சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இணைந்து இப்படத்தை ரூ 70 கோடி செலவில் தயாரிக்கவுள்ளார். தயாரிப்பு செலவில் பாதி சிரஞ்சீவியின் சம்பளமாம். நடிகை நயன்தாரா இப்படத்தில் நாயகியாக நடிக்கலாம் என கூறப்படுகின்றது. தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்ப இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் விவி விநாயக் மாற்றி வருகின்றார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் மார்ச் மாதத்தில் துவங்கும் என விவி விநாயக் கூறியுள்ளார். ராம் சரணின் பிறந்த நாளான மார்ச் 27ல் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கான படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது.