'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
கேரளாவின் கோழிக்கோடு மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மற்ற கலெக்டர்களில் இருந்து நிறையவே வித்தியாசப்படுபவர், மாபெரும் கலாரசிகர். ஒருபக்கம் தனது பணிகளை எந்தவித சுணக்கமும் இல்லாமல், எந்தவித சர்ச்சைகளுக்கும் இடம் கொடுக்காமல் செய்து வரும் பிரசாந்த், இன்னொரு பக்கம் மலையாள சினிமாவின் தீவிர ரசிகர். கலெக்டர் என்பதற்காக சினிமாவை ஒதுக்கிவைக்க அவர் விரும்பவில்லை. சில மாதங்களுக்கு முன்பு கூட மலையாளத்தில் வெளியான 'ராணி பத்மினி' படத்தை பார்த்துவிட்டு தனது பேஸ்புக் பக்கத்தில் படத்தையும் மஞ்சு வாரியாரின் நடிப்பையும் பாராட்டி எழுதியவர் தான் இவர்.
அதேபோல கோழிக்கோடு மக்களுக்கு பயன்படும் விதமாக ட்ராபிக்கை முறைப்படுத்தும் வகையில் மோகன்லாலின் பேமஸ் டயாலாக்கான 'சவாரி கிரிகிரி' திட்டம் மற்றும் கோழிக்கோட்டை பசியில்லாதவர்களாக மாற்றும் வகையில் துல்கர் படத்தின் ஹிட் விஷயமான ஆப்பரேஷன் சுலைமானி' என இவரது ஐடியாக்களும் சினிமாவை ஒட்டியே அமைந்தன. இதுபோதாதென்று தற்போது மலையாள இயக்குனர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இயக்கும் அடுத்த படத்தின் கதையை எழுதும் முயற்சியில் இறங்கியுள்ளாராம் கலெக்டர் பிரசாந்த். இவருடன் இவரது மனைவி லட்சுமியும் கதை எழுதுவதில் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளாராம். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த கதை உருவாக்க இருக்கிறதாம்.