‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கடுமையாக வேலை செய்துக் கொண்டிருக்கிறார் ராஜமௌலி. ஆனாலும், அவரது அடுத்த பிரம்மாண்ட பிராஜக்ட்டான கருடா படம் பற்றிய செய்திகளும் வதந்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றன. அவற்றில் ஒன்று மோகன் லால் தான் கருடா படத்தின் கதாநாயகன் என்பது.
இதற்கு முற்றுப்புள்ளி அல்லது தெளிவுபடுத்தும் நோக்கத்தோடு சமீபத்தில் செய்தி ஒன்றிற்கு பேட்டியளித்த ராஜமௌலி, மோகன்லால் சாரை வைத்து படம் பண்ணும் ஆசை எனக்கு எக்கச்சக்கமாக இருக்கிறது. ஆனால், கருடா படத்திற்காக இதுவரை அவரிடம் நான் பேசவில்லை. அதுமட்டுமின்றி பாகுபலியின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நிறைய இருக்கின்றன. அதனால், தற்போது என்னால், கருடா படத்தைப் பற்றியும் அதன் கதாபாத்திரங்களுக்கான நட்சத்திர தேர்வினையும் தற்போது என்னால், செய்யய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களில் தற்போது தீவிரமாக நடித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு மேல் அனுஷ்கா, ராணா டகுபதி ஆகியோர் பாகுபலி இரண்டாம் பாகத்தில் பங்குபெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.