பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கடுமையாக வேலை செய்துக் கொண்டிருக்கிறார் ராஜமௌலி. ஆனாலும், அவரது அடுத்த பிரம்மாண்ட பிராஜக்ட்டான கருடா படம் பற்றிய செய்திகளும் வதந்திகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருகின்றன. அவற்றில் ஒன்று மோகன் லால் தான் கருடா படத்தின் கதாநாயகன் என்பது.
இதற்கு முற்றுப்புள்ளி அல்லது தெளிவுபடுத்தும் நோக்கத்தோடு சமீபத்தில் செய்தி ஒன்றிற்கு பேட்டியளித்த ராஜமௌலி, மோகன்லால் சாரை வைத்து படம் பண்ணும் ஆசை எனக்கு எக்கச்சக்கமாக இருக்கிறது. ஆனால், கருடா படத்திற்காக இதுவரை அவரிடம் நான் பேசவில்லை. அதுமட்டுமின்றி பாகுபலியின் இரண்டாம் பாகத்தின் பணிகள் நிறைய இருக்கின்றன. அதனால், தற்போது என்னால், கருடா படத்தைப் பற்றியும் அதன் கதாபாத்திரங்களுக்கான நட்சத்திர தேர்வினையும் தற்போது என்னால், செய்யய முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பிரபாஸ், ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்களுடைய கதாபாத்திரங்களில் தற்போது தீவிரமாக நடித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகைக்கு மேல் அனுஷ்கா, ராணா டகுபதி ஆகியோர் பாகுபலி இரண்டாம் பாகத்தில் பங்குபெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.