பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மோதிரக்கையால் குட்டுப்பட்டு திரையுலகில் அறிமுகமானவர் மலையாள நடிகை ஷிவதா நாயர். பிரபல இயக்குனர் பாசில் இயக்கிய 'லிவிங் டுகெதர்' படத்தில் அறிமுகமான ஷிவதா நாயர், அடுத்து தமிழில் நடித்த 'நெடுஞ்சாலை' படம் மூலம் பாப்புலரானர். தற்போது மலையாள நடிகரான முரளி கிருஷ்ணனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார் ஷிவதா. முரளி கிருஷ்ணன் ஒரு பக்கம் நடிப்பு, இன்னொரு பக்கம் பிசினஸ் என இரட்டை குதிரையில் சவாரி செய்பவர். துல்கர் அறிமுகமான 'செகன்ட் ஷோ' படத்தில் முரளி கிருஷ்ணனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, 'ரகுவிண்டே ஸ்வந்தம் ரஸியா' படத்தில் ஹீரோவாக நடித்த முரளி கிருஷ்ணன் விரைவில் வெளியாக இருக்கும் 'ஜக்காரியா போத்தன் ஜீவிச்சிருப்புண்டு' என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். ஷிவதாவும், முரளி கிருஷ்ணனும் நண்பர்களின் விழாக்களில் சந்தித்தபோது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு அது காதலாக மாறி, இன்று இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமண நிகழ்ச்சிவரை வெற்றிகரமாக வந்துவிட்டது. தற்போது பாபி சிம்ஹாவுடன் 'பாம்புசட்டை' மற்றும் அசோக் செல்வனுடன் 'ஜீரோ' ஆகிய படங்களில் நடித்து வரும் ஷிவதா நாயர், விரைவில் தனது திருமண தேதியை அறிவிக்க இருக்கிறாராம்.