'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சையான விசயங்களை டுவிட்டரில் வெளியிட்டு பிரபலங்களின் எதிர்ப்புகளை சம்பாதித்து வருபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. யாரையாவது குற்றம் சொல்ல வேண்டும் என்றாலோ அல்லது புகழ்ந்து பேச வேண்டும் என்றாலோ அதை நெத்தியடியாக சொல்லி வருவதால், இந்தியா திரையுலகின் மிகப்பெரிய சர்ச்சை நாயகனாகியிருக்கிறார் ராம்கோபால்வர்மா.
அந்த வகையில், சமீபத்தில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியை ஒரு நடிகராக மட்டுமே எனக்கு பிடிக்கும் என்று சொன்னவர், சினிமாவுக்கு வெளியே அவரை பிடிக்காது என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதமாக பேசியிருந்தார். அதேசமயம் சிரஞ்சீவியின் ரசிகர் நான் என்று சொன்னதால் அந்த பிரச்னை பூதாகரமாக வெடிக்கவில்லை. இதனால் சிரஞ்சீவியின் ஆந்திர ரசிகர்களின் வாயில் விழாமல் தப்பித்துக்கொண்டார் ராம் கோபால் வர்மா.
இந்நிலையில், தான் எழுதியுள்ள கன்ஸ் அன்ட் தைஸ் என்ற சுயசரிதை புத்தகத்தில் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரை கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார் ராம்கோபால்வர்மா. இதுகுறித்து அவர் கூறும்போது, ஸ்ரீதேவி வானில் இருந்து இறங்கி வந்த ஒரு அழகான தேவதை. அவர் போனிகபூர் வீட்டு கிச்சனில் சமைத்துக்கொண்டிருப்பதை என்னால் ஏற்க முடியாது. இதற்காக நான் போனிகபூரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஸ்ரீதேவியை வைத்து தெலுங்கு, இந்தியில் 4 படங்கள் இயக்கியிருக்கிறார் ராம்கோபால்வர்மா.