இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ரவி தேஜா நடிப்பில் பெங்கால் டைகர் திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் அவர் அடுத்த படங்களில் ஆர்வம் காட்ட துவங்கி விட்டார். ஓ மை பிரண்ட் படத்தின் வாயிலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இயக்குநர் வேணு ஸ்ரீராம் இயக்கும் எவடு ஒக்கடு எனும் படத்தில் ரவி தேஜா நடித்து வருகின்றார். பிரேமம் பட நாயகி அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தற்போது கஞ்சே பட நாயகி பிரக்யா ஜெஸ்வால் இப்படத்தில் இரண்டாவது நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். வருண் தேஜிற்கு ஜோடியாக பிரக்யா ஜெஸ்வால் நடித்த கஞ்சே திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அப்படத்தைத் தொடர்ந்து டோலிவுட்டின் மாஸ் மகாராஜா ரவி தேஜாவுடன் பிரக்யா ஜோடி சேரவுள்ளார். தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கும் எவடு ஒக்கடு படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார். இப்படத்திற்கு பின்னர் இயக்குனர் சுதீர் வர்மா இயக்கும் படத்தில் ரவி தேஜா நடிக்கவுள்ளார்.