மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சில விஷயங்களை சொல்பவர் சொன்னால் தான் எடுபடும் என்பது மீண்டும் ஒருமுறை மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் மூலமாக நிரூபணமாகி இருக்கிறது. சில தினங்களுக்கு முன் மலையாள நாளிதழ் ஒன்றில் தெருவோரத்தில் மனிதர்கள் தின்று போட்ட மிச்சத்தை, சில ஆதிவாசி குழந்தைகள் சாப்பிடுவதை புகைப்படமாக பிரசுரித்து இருந்தது. இதை பார்த்து வருத்தப்பட்ட மோகன்லால் தனது சமூக வலைதளத்தில், “ஆதிவாசி மக்களுக்காக, அவர்களின் குழந்தைகளுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியெல்லாம் எங்கே போகிறது..? அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்..? ஆதிவாசியினருக்கு உதவிசெய்கிறோம் என்றுகூறி ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனங்கள் எல்லாம் அந்த பணத்தை என்ன செய்தன.. செய்கின்றன..? என காட்டமாக விமர்சித்திருந்தார்..
பேப்பரில் புகைப்பட செய்தியாக வந்தபோது கண்டுகொள்ளாத அரசு, மோகன்லாலிடம் இருந்து இப்படி ஒரு தாக்குதல் வரும் என எதிர்பார்க்கவில்லை. முதலில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் இவையெல்லாம் வேண்டுமென்றே அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் வீண் குற்றச்சாட்டுகள் என மறுத்தார். ஆனால் ஆதாரங்கள் ஒரு பக்கம் வலுவாக இருக்க, மோகன்லாலும் இந்த விஷயத்தில் மூக்கை நுழைக்க, இதுபோதாததென்று சில சமூக அமைப்புகளும் இந்த விஷயத்தை கையிலெடுக்க, தற்போது ஆதிவாசி சிறுவர்களின் நிலை குறித்த ஆய்வுக்கும் விசாரணைக்கும் உத்தரவிட முடிவுசெய்துள்ளதாம் கேரள அரசு.