பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
கடந்த மாதம் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படம் வெற்றிகரமாக ஒரு மாதத்தை தொடும் விதமாக ஓடிக்கொண்டிருக்கிறது.. உண்மை தான்.. 25 கோடி ரூபாய் வசூலை தாண்டி இன்னும் வசூலித்துக்கொண்டு இருக்கிறது. அதுவும் உண்மைதான்.. அதில் காதல் ஜோடியாக நடித்துள்ள பிருத்விராஜ்-பார்வதி இருவருக்கும் இதுவரை கிடைத்த புகழை விட அதிகம் பெற்றுத்தந்திருக்கிறது... மறுக்கவே இல்லை.. பிருத்விராஜின் படங்களில் அதிக வசூல் செய்த படமாக இடம்பிடித்துவிட்டது.. சந்தேகமே இல்லை... படம் வெற்றிபெறாமல் போயிருந்தால் தற்கொலை செய்துகொண்டிருப்பேன் என சொன்ன படத்தின் இயக்குனர் ஆர்.எஸ்.விமல் தெம்பாக காலரை தூக்கிவிட்டு வலம் வருகிறார்.. அதையும் கண்கூடாகத்தான் பார்க்கிறோமே..
ஆனால் இந்த வெற்றி அனைத்திற்கும் ஆதார சுருதியான ஒருவரை அனைவருமே மறந்துவிட்டார்கள் என்பதுதான் தற்போது வேதனை அளிக்கும் விஷயம்.. அவர்தான் இந்தப்படத்தின் கதாநாயகி.. இல்லையில்லை.. கதையின் நாயகி. உண்மையில் நடந்த இந்த நிகழ்வுகளின் உருவமாக உயிரோடு இருக்கும் காஞ்சனமாலா.. அவருக்கும் அவரது காதலர் மொய்தீனுக்கும் நாற்பது வருடங்களுக்கு முன் நடந்த காதல் நிகழ்வுகளைத்தானே படமாக எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்கள்.. படப்பிடிப்புக்கு முன்னர் பலமுறை காஞ்சனமாலவை சந்தித்து அவரின் காதல் நினைவுகளை மாலையாக கோர்த்து வந்து படம் எடுத்தார் இயக்குனர் விமல், படம் வெற்றிபெற்றபின் இவர்களில் ஒருவர்கூட அவரை சென்று பார்க்கவில்லை என்பதுதான் சோகம்..
இத்தனைக்கும் தனது காதலர் மொய்தீன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் நடிப்பதாக இருந்தால் மட்டுமே இந்த கதையை படமாக்க அனுமதிப்பேன் என்று சொன்னவரை, அந்த பிருத்விராஜ் கூட சென்று சந்திக்காததுதான் மிகப்பெரிய வருத்தம். தற்போது சிறிய அறை ஒன்றில் பலவிதமான புத்தகங்களை அடுக்கி தனது காதலர் பெயரில் 'மொய்தீன் சேவா மந்திர்' எனும் அமைப்பை நடத்திவரும் இவருக்கு இன்னும் கொஞ்சம் விசாலாமான இடம் இருந்தால் அது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தாராம்... ஆனால் 'மொய்தீன்' படக்குழுவினர் யாரும் இதுபற்றி கண்டுகொள்ளாமல் இருந்த நிலையில், நடிகர் திலீப் காஞ்சனமாலாவின் தேவையறிந்து அவருக்காக புதிய கட்டடடம் ஒன்றை கட்டிக்கொடுக்க முன்வந்துள்ளாராம். இதுகுறித்து பேச, காஞ்சனமாலா வசிக்கும் முக்கம் பகுதிக்கு வந்து அவரை சந்தித்துள்ளாராம் திலீப்.