ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பார்வதி(மேனன்) சினிமாவை விட்டு விலகப்போகிறார் என சமீபத்தில் ஊடகங்களில் பரவிய செய்தி, மலையாள ரசிகர்களை பதைபதைக்க வைத்தது. திறம்மையான நடிகையாக இருந்தாலும் சில வருடங்களாக மலையாள சினிமாவில் கவனிக்கப்படாமல் இருந்த பார்வதி, கடந்த வருடம் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' படத்தில் ஆர்.ஜே.சாராவாக நடித்து ரசிகர்களின் மனதில் நுழைந்து சிம்மாசனமிட்டு அமர்ந்தார்.. சமீபத்தில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தில் காஞ்சனமாலாவாகவே வாழ்ந்திருந்த பார்வதியின் நடிப்பை பாராட்டாத ஜனம் பாக்கியில்லை.. சொல்லப்போனால் அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் இப்போதுதான் துவங்கியிருக்கிறது.
இந்த நிலையில் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கப்போவதாக செய்தி வெளியானதால் ரொம்பவே டென்சன் ஆகிவிட்டார் பார்வதி. சமீபத்தில் மலையாள நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் “சினிமா என்பது என் கனவு.. அதை நான் ரசித்து அனுபவித்து கொண்டிருக்கிறேன்.. சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என ஒருபோதும் சொல்லவே இல்லையே.. பின் ஏன் சில மீடியாக்கள் இப்படி செய்திகளை திரித்து வெளியிடுகின்றன.. இதுபோன்ற செய்திகளை வெளியிடும் முன் குறைந்தபட்சம் என்னிடம் கேட்டு அதை உறுதிப்படுத்தியிருக்கலாமே.. நான் இப்போதும் மீடியா மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்” என சீறியிருக்கிறார் பார்வதி. அப்படி சினிமாவைவிட்டு விலகுவதாக இருந்தால், தானே அந்த அறிவிப்பை தைரியமாக வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார் பார்வதி.